கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை! - இருவர் கைது!

63பார்த்தது
கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை! - இருவர் கைது!
வேலூர் காட்பாடியில் போதை ஊசி தயார் செய்து விற்பனை செய்து வந்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வேலூர் காட்பாடி அடுத்த திருவள்ளுவர் நகரில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி தயார் செய்து விற்பனை செய்வதாக காட்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் நகரில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு 2 இளைஞர்கள் போதை ஊசி பயன்படுத்திக்கொண்டு, போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 NS மருந்து பாட்டில்கள், அதை செலுத்துவதற்காக வைத்திருந்த 5 ஊசிகள், சுமார் 70 மாத்திரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், பிடிப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அணைக்கட்டு அருகே உள்ள ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி காந்த் (26) மற்றும் வேலூர் கொசுப்பேட்டையைச் சேர்ந்த பரத் என்கிற கௌதம் (28) என்பது தெரிந்தது. வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் என். எஸ் போன்ற மருந்துகளுடன் கலந்து ஊசியில் நிரப்பி ரூபாய் 300 முதல் 500 வரை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருவது தெரிந்தது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி