வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் சத்துவாச்சாரி இந்திராநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து மதுவிற்ற கோபிநாதன் (64) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.