தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கற்பகம் கூட்டுறவு சங்கம் சார்பில் காவலூர், ஆர். எம். எஸ். புதூர், ராணி வட்டம், ஆலங்காயம், சுண்ணாம்புபள்ளம், வெள்ளக்குட்டை, சொரக்காயல்நத்தம், கிரிசமுத்திரம் புதூர் ஆகிய பகுதிகளில் முழு நேரம் மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் எம். எல். ஏ. க்கள் தேவராஜி, வில்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு 2 முழு நேர ரேஷன் கடை உள்பட 8 ரேஷன் கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினர்.