புதிய அடையாள அட்டை வழங்கும் பயிற்சி

69பார்த்தது
செய்தி

*திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளியில் ஆதார் புதுப்பித்தல் மற்றும் புதிய அட்டை வழங்கும் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துவக்கி வைத்தார். *

போதுமான ஆதார் மையங்கள் இல்லாததால் தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் ஆதார் மையங்களுக்கு ஒரு நாளைக்கு முன்பே வந்து இரவு முழுவதும் கொசு கடியிலும் பணியிலும் உறங்கி ஆதார் கார்டை புதுப்பித்து செல்ல வேண்டிய அவல நிலைகள் அரங்கேறி வந்த நிலையில்.

இது போன்ற சிரமங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து பள்ளிகளிலும் ஆதார் கார்டை புதுப்பித்தல் மற்றும் புதிய கார்டை பெறுவதற்கான குழுக்களை அமைக்க தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் தேர்வுகளை நடத்தின. இதனைத் தொடர்ந்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு தமிழகம் முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில்.