ஆடுகள் விற்பனை மந்தம்; வியாபாரிகள் சோகம்

1903பார்த்தது
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் சந்தை மேட்டில் ஆட்டு சந்தை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அதிகாலை 5 மணியிலிருந்து ஆடுகள் வந்த வண்ணம் இருந்தன. செம்மறி ஆடுகள், பல நிற வெள்ளாடுகள், கருப்பு நிற வெள்ளாடுகள், ஆட்டுக்குட்டிகள் என 400-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த வாரம் ஒரு ஆடு ரூபாய் 12,000 முதல் ரூபாய் 15,000 வரையும், குட்டிகள் ரூபாய் 8,000 முதல் ரூபாய் 10,000 வரையும் விற்பனையானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகள் விற்பனை இல்லை என வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவித்தனர்.