பேரணாம்பட்டு டவுன் எம். ஜி. ஆர். நகர் அரவட்லா ரோட்டில் தனியார் பள்ளி பின்புறம் பகுதியில் வசித்து வருபவர் ஷமில் அகமத். இவரது வீட்டில் சுமார் 5 அடி நீளம் உள்ள சாரைபாம்பு ஒன்று புகுந்தது.
இது குறித்து பேரணாம்பட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சாரை பாம்பை மீட்டு அருகிலுள்ள அரவட்லா வனப்பகுதியில் விட்டனர்.