திருவலம் பகுதியில் தெலுங்கானா போலீசார் கொடி அணி வகுப்பு

52பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவலம் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக தெலுங்கானா போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது என்பதை அறிவிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கொடிய அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன்படி திருவலம் காவல் நிலைய ஆளுகைக்கு உட்பட்ட கெம்மராஜபுரத்தில் காட்பாடி துணை போலீஸ் இரண்டு தலைமையில் தெலுங்கானா சிறப்பு காவல் படையினர் மற்றும் திருவலம் போலீசார் கொடிய அணிவகுப்பு நடத்தினர். கெம்மராஜபுரம் முக்கிய வீதிகளில் திருவலம் பஜார் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய வீதிகளின் வழியாக சென்ற கொடிய அணிவகுப்பு ஊர்வலம் திருவலம் பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி