முதலமைச்சர் வந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டும்!

68பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடியில் காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் வேலூர் மாநகர துணை மேயர் சுனில்குமார் தலைமையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தி. மு. க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது கட்சியினர் அனைவரும் தங்களுடைய வீடுகளில் திமுக கொடி ஏற்ற வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை போது அனைவரும் கடைசி வரை இருக்க வேண்டும் ஒரு ஓட்டு என்பது கூட முக்கியமானது.

அமெரிக்காவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார். தலைமை இங்கு இல்லையே என்ற ஏக்கம் உள்ளது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் தி. மு. க வெற்றி பெறும் ஒளிமயமான எதிர்காலம் வந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், " என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி