அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டம்

76பார்த்தது
அ. தி. மு. க. , பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தமிழக பா. ஜ. க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இந்த நிலையில் இபிஎஸ் குறித்து அண்ணாமலை அவதுாறாக பேசியதாக கூறி அதிமுகவினர் தமிழக முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமையில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் அண்ணாமலையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் அண்ணாமலையின் 3 உருவ பொம்மைகள் கொண்டு வந்து திடீரென தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி பொம்மைகளை அணைத்தனர். ஒவ்வொரு பொம்மையாக அணைக்க அடுத்தடுத்து பொம்மைகளை கட்சியினர் எரித்தனர். மேலும் அண்ணாமலையின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிந்த பேனர் கொண்டு வந்து அதை செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை வெளி காட்டினார். அதிமுகவினரின் இந்த உருவ பொம்மை இனிப்பு போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி