குடியாத்தம் அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

563பார்த்தது
வேலூர் மாவட்டம்
குடியாத்தம் அடுத்த பரவக்கல் பகுதியை சேர்ந்த பாஸ்கர் ( 35) தனது தாயாருடன் தனியாக வசித்து கூலி வேலை செய்து வந்தார் இவருக்கு திருமணம் ஆகவில்லை

இதனிடையே அதே பகுதியை சேர்ந்த

பாஸ்கரின் உறவினர் ராஜா என்பவர் தனது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனதாகவும் பாஸ்கர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

புகாரி பேரில் கடந்த இரு நாட்களுக்கு முன் பாஸ்கரை காவல் நிலையம் அழைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டணர்

இதனிடையே புகார் அளித்த பாஸ்கரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் தங்கள் உறவினர்களே பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதாகவும் அதனால் வழக்குப் வேண்டாம் என்று கூறிவிட்டு பாஸ்கரை அழைத்துச் சென்றுள்ளனர்

இதனிடையே மன உளைச்சலில் இருந்த பாஸ்கர் இன்று காலை தனது தாயாரை சோப்பு வாங்கி வர சொல்லிவிட்டு அனுப்பி உள்ளார் அப்போது தனியாக இருந்த பாஸ்கர் மின்விசிறியில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி