ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோவிலில் 7-ஆம் ஆண்டு திருவிழா

74பார்த்தது
வேலூர் மாவட்டம்

காட்பாடியில் அருகே இரயில்வே தளத்தில் ஒற்றைப் பனை மரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோவிலில் 7-ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது


வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம் ரோடு அருகில் இரயில்வே தளத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ பச்சையம்மன் வேப்பமரம் ஒற்றை பனை மரத்தில்
எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜடா முனீஸ்வரன் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ஜடா முனிஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பக்தி பரவசத்துடன் வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்

திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம். சுனில்குமார் அவர்களின் துணைவியார் சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் இதில் திமுக பிரதநிதி சீ. நாயுடுபாபு, பூசாரி பாபுஜி, கவின், பாலமுருகன், சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி