அரக்கோணம் அருகே தொழிலாளி கிணற்றில் குறித்து தற்கொலை!

85பார்த்தது
அரக்கோணம் அருகே தொழிலாளி கிணற்றில் குறித்து தற்கொலை!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ராமு (வயது 38). திருமணம் ஆகாதவர். இவ ருக்கு ஒரு அண்ணன், ஒரு அக்காள் உள்ளனர். ராமு அரக்கோணம் பழ னிபேட்டை பகுதியில் உள்ள தனது அண்ணன் டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். ராமுவிற்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ராமு குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி