நெமிலி தாலுகாவில் நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக வேப்பேரியில் நீதிமன்ற கட்டடம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தை நெமிலி மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ், விஏஓ சங்கீதா, நில அளவைத் துறையினர் பார்வையிட்டு அரசுக்கு சொந்தமான இடம் எவ்வளவு உள்ளது என்பதை அளவீடு செய்து வட்டாட்சியர் பாலச்சந்திரனுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.