தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை!

85பார்த்தது
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். அதேப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் காலை வழக்கம்போல மளிகைக் கடையை திறந்தார்.

அப்போது அவரது மகன் சூர்யா (26) என்பவர் மளிகைக் கடையில் உள்ள மின்விசிறி மாட்டும் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி