நெடுஞ்சாலையில் இளைஞர்கள் பைக் சாகசம் - அச்சத்தில் மக்கள்

79பார்த்தது
நெடுஞ்சாலையில் இளைஞர்கள் பைக் சாகசம் - அச்சத்தில் மக்கள்
மின்னூர் பகுதி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் வீலிங் செய்தபடி சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே பயணம் செல்லும் சூழல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகளுக்கு தெரியாமலேயே வாகன பதிவு எண் வைத்து போக்குவரத்துக் காவல் துறையினர் விதிமீறல் அபராதம் விதித்து வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்பவர்கள் மீது விதிவிலக்கு ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் ஆம்பூர்- மாதனூர் மற்றும் ஆம்பூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி