ஆம்பூர் அருகே 2 லாரி, ஜேசிபி இயந்திரம் பறிமுதல்!

2286பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காட்டுவெங்கடாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அனுமதியின்றி மணல் அள்ளி கடத்துவதாக உமரபாத் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் பழனி முத்து தலைமையிலான போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் ஜேசிபி ஓட்டுநர்கள் ஞானவேல், வல்லரசு, கார்த்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி