இனி தமிழகத்தில் மின்தடைக்கு வாய்ப்பே இல்லை

83பார்த்தது
இனி தமிழகத்தில் மின்தடைக்கு வாய்ப்பே இல்லை
இந்த ஆண்டு நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலத்தை மத்திய அரசு தொடங்கியது. ஒடிசாவின் 21 கோடி டன் நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் நிலக்கரி சுரங்க ஏலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் பங்கெடுத்திருந்தது. ஏலத்தை பொறுத்தவரை ஒரே ஒரு நபர் (மாநிலத்தின் சார்பில்) கலந்துகொண்டால் ஏலம் நிறுத்தப்பட்டு மற்றொரு நாள் நடத்தப்படும். அப்போதும் ஒருவர் மட்டும் கலந்துகொண்டால் அவருக்கே ஏலம் விடப்படும். அந்த நிலை தான் தற்போது நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டும் கலந்துகொண்டு ஏலத்தை தட்டிதூக்கியுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் மின் உற்பத்தி அதிகரித்து மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி