திருக்குறளை வீடுகளில் நாள்தோறும் ஓத வேண்டும் - வைரமுத்து

79பார்த்தது
திருக்குறளை வீடுகளில் நாள்தோறும் ஓத வேண்டும் - வைரமுத்து
தமிழர்கள் திருக்குறளை தங்கள் வீடுகளில் நாள்தோறும் ஓத வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர், மும்மொழிக் கொள்கை திணிப்பு என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழித் திணிப்பை வேண்டாம் என்கிறோம். இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். தாய்மொழி பண்பாட்டு மொழி, ஆங்கிலம் நாகரிக மொழி; ஒரு மனிதன் பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் திகழ தமிழும், ஆங்கிலமும் போதும். இந்தி மொழி மீது அச்சம் உள்ளது. இந்தி மொழி மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை, ஆனால் அச்சம் இருக்கிறது; எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க நாங்கள் தயாராக இல்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி