தடை செய்யப்பட்ட சீன நாட்டு மாஞ்சாவை பயன்படுத்தி சிலர் பட்டங்களை பறக்க விடுவதால், விபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் இந்த சீன மாஞ்சாவால் மும்பையில் 1,000 பறவைகள் இறந்தன. மேலும் 800 பறவைகள் படுகாயமடைந்தன. பறவை ஆர்வலர்கள் இதை முன்கூட்டியே உணர்ந்து, மும்பை நகரம் முழுவதும் 25 இலவச பறவை மருத்துவ முகாம்களை அமைத்தனர். இந்த மையங்களில், காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.