உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. புல்ராய் என்ற கிராமத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை பெண்கள் உள்பட 122 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி மீட்கப்பட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.