அடித்து தூக்கிய கார்.. காற்றில் பறந்த இருவர் (வீடியோ)

583பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்து நடந்தது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது. இரவு 10 மணியளவில் என்டிஏ-பஹுலியில் உள்ள பீகாக் ஹோட்டல் முன் இரண்டு இளைஞர்கள் செல்போனை பார்த்தபடி சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. வேகமாக வந்து மோதியதில் இளைஞர்கள் இருவரும் காற்றில் பறந்து கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி