1.7 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி - அமைச்சர் தகவல்

565பார்த்தது
1.7 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி - அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 1,07,225 பேருக்கு நீட், ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதில் நீட் தேர்வுக்கு 46,216 பேரும், ஜேஇஇ-க்கு 29,279 பேரும், 2 தேர்வுகளிலும் பங்கேற்க 31,730 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பள்ளிகளுக்கு தரமற்ற விளையாட்டு பொருட்கள் வழங்கியது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.