திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தெள்ளாா் போலீஸாா் கீழ்வில்லிவலம், நாவல்பாக்கம், சோகத்தூா் ஆகிய கிராமங்களில் உள்ள மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, நாவல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடையில் இருந்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.