திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், இன்று வைகாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசன திரவியங்கங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் உற்சவமூர்த்திகள் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.