திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் ஆங்கில புத்தாண்டு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு நகரின் பல தெருக்களில் அப்பகுதி இளைஞா்கள் மின்விளக்கு தோரணங்களை கட்டி புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்றனா்.
மேலும், தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.