திருவண்ணாமலை மாவட்டம், ஊரக வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் அத்தியந்தல் குழு மாணவிகள் மக்களுக்கு தானியங்கி வேளாண் வானிலை சேவை செயலி பற்றி செயல் விளக்கம் அளித்தனர். விவசாயிகளுக்கு தடை இல்லாமல் தங்கள் கிராமத்தின் வானிலை சார்ந்த விபரங்களும் தங்கள் பயிருக்கு தேவையான விபரங்களும் உடனடியாக கிடைப்பதற்காக செயலி பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.