சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் G. V. கஜேந்திரன் இன்று திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சூரியகுளம் அருகில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
உடன் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சேவூர் S. இராமச்சந்திரன் MLA , மாவட்டக் கழக செயலாளர் L. ஜெயசுதா லட்சுமிகாந்தன், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் R. M. பாபு முருகவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.