உடுமலை: தக்காளி விலை சரிவால் சாலையில் வீசி செல்லும் அவலம்!

879பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது நடப்பாண்டு கோடைகால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 கிலோ தக்காளி பெட்டி 2400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. உடுமலை சந்தையில் குறைந்த பட்ச விலையாக 14 கிலோ தக்காளி பெட்டி ரூ. 50க்கும் , அதிகபட்ச விலையாக ரூ. 200 க்கும் கீழ் ஏலம் போனதால் தக்காளி விவசாயிகள் கவலை அடைந்தனர்
விவசாயிகள் கூறியதாவது. வெயிலின் தாக்கம் மற்றும் விலை சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் விளைந்த தக்காளி பழங்களை ரோட்டில் கொட்டும் அவல நிலை தற்பொழுது ஏற்பட்டு உள்ள காரணத்தால் உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில் இப்பகுதியில் தக்காளி பழங்கள் இருப்பு வைக்க குளிருட்டபட்ட கிடங்கும் தக்காளி பழங்கள் மூலம் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

டேக்ஸ் :