பல்லடம்: லாரி மோதி பெண் படுகாயம் - பதைபதைக்கும் வீடியோ

5576பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த சின்னியகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் செட்டிபாளையம் சாலையில் பல்லடம் நோக்கி சென்றுள்ளார். அப்போது பின்னால் பல்லடம் நோக்கி வந்த லாரி அதி வேகமாக முன்னால் சத்தியா ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் சத்தியா படுகாயமடைந்தார்.

அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியினர் அந்த லாரியை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற ஜோபிளிசை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.