திமுக வேட்பாளர் மனைவியுடன் வந்து வாக்குப்பதிவு.

1560பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கருப்புசாமி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்
கே. ஈஸ்வர சாமி,
இவர் திமுக மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராகவும், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவராகவும் பொறுப்பு வைத்து வந்தார். இவரது மனைவி லதா பிரியா ஈஸ்வர சாமி மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் திமுக தலைமை கழகத்தால் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக,
கே. ஈஸ்வர சாமி அறிவிக்கப்பட்டு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவரது சொந்த கிராமமான கருப்புசாமி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது மனைவியுடன் வந்து வாக்கு பதிவு செய்தார்.