காங்கேயத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி ஏற்பு

61பார்த்தது
காங்கேயத்தில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி ஏற்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பணியாற்றி வந்த வட்டார‌ வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஓய்வு பெரும் கடைசி நாளில் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக காங்கேயம் பகுதிக்கு தாராபுரத்தை சேர்ந்த த. பானுப்பிரியா பொறுப்பேற்று உள்ளார். இதனை அடுத்து புதிதாக பதவியேற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு காங்கயம் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி