மூலனூர்: 1. 25 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம்!

61பார்த்தது
மூலனூர்: 1. 25 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 492 பேர் கலந்து கொண்டு பருத்தி விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 8, 366 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் மதிப்பு சுமார் 1. 25 கோடி ஆகும். இதனை ஈரோடு திருப்பூர் கோவை கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து மொத்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் அதேபோன்று குண்டடம் மூலனூர் வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி