தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேர் நிலை சேர்க்கப்பட்டது

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பெருங்கருணை நாயகியாக உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகும். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான, இக்கோயிலில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த தலமான இக்கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். சித்திரை திருவிழா முதல் நிகழ்வாக கோயிலில் கடந்த 14ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 15ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகளும், 16ம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகளும், 17ம் தேதி புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சிகளும் நடைபெற்றது. நேற்றைய தினம் கருணாம்பிகை உடனமர் அவிநாசி அப்பர் திருத்தேரில் எழுந்தருளிய நிலையில் இன்று தேர் திருவிழா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி