அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்: திருச்சியில் மோடி பேச்சு

1058பார்த்தது
அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்: திருச்சியில் மோடி பேச்சு
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது மறைந்த நடிகரும், தே. மு. தி. க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்தை நினைவுகூர்ந்து பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், "விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன்தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தினார். " என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி