திருச்சியில் ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து ஒருவர் சாவு

4895பார்த்தது
திருச்சியில் ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து ஒருவர் சாவு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நாச்சிகுளம் பகுதி சேர்ந்தவர் முத்து சரவணன் (வயது 34). இவர் நேற்று திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் ஏறி பயணம் செய்தார். இந்த பஸ் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தவுடன் பயணிகள் அனைவரும் பஸ்சிலிருந்து கீழே இறங்கி சென்றனர். ஆனால் முத்து சரவணன் மட்டும் இறங்காமல் சீட்டில் அமர்ந்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் அருகில் சென்று முத்து செல்வனை பார்த்த போது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதையடுத்து அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழு முத்துசரவணன் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி