தாய் திட்டியதால் சிறுவன் மாயம்

570பார்த்தது
தாய் திட்டியதால் சிறுவன் மாயம்
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு சஞ்சய் என்கிற ஸ்ரீ ஞானேஸ்வரர் (வயது 13)என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 7ந்தேதி வீட்டில் இருந்த சஞ்சயை அவரது தாய் திட்டியதாக தெரிகிறது. இதனால் சஞ்சய் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக பல இடங்களில் தேடிப் பார்த்தும் சஞ்சை எங்கு கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை விஜயகுமார் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சயை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி