வெகு விமரிசையாக நடைபெற்ற கந்தூரி விழா

553பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் ஷைகுனா அபுல்ஹசன் ஷாதுலி நாயகத்தின் பெயரால் கந்தூரி விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரப்பெற்ற ஷாதுலியா தரிக்காவின் இஹ்வான்களை கொண்டு புத்தாநத்தம் மேற்கு பள்ளிவாசலில், மவ்லிது ஷரீப், திக்ரு மஜ்லிஸ் கூட்டுப் பிரார்த்தனையுடன் இன்று காலை 3000 கிலோ அரிசியை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி