அமைச்சர் அன்பில் மகேஷ் காரை சோதனையிட்ட பறக்கும் படை

67பார்த்தது
தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது முதல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி - புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது மொராய் சிட்டி அருகே உள்ள சோதனை சாவடியில் அவருடைய காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அமைச்சரின் காரை சோதனை செய்தனர். அந்த காரில் வேட்பாளர் துரை வைகோவும் உடன் இருந்தார். சோதனையே முடித்த பின் அவர்களை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி