பாதை தொடர்பான தகராறில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு

61பார்த்தது
துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டப்பாளையத்தை சேர்ந்தவர்கள் ஜெயராஜ் மற்றும் வைரமணி இருவரும் உறவினர்கள் இவர்கள் இருவருக்கும் அருகருகே விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த விவசாய நிலத்துக்கு செல்லும் பாதை தொடர்பாக இவர்களுக்குள்ளும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக சம்பவம் நடந்த நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இருவர் காயமடைந்தனர் காயமடைந்த இருவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரி பேரில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி