திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழாவில்
பிரதமர் மோடி நேற்று பங்கேற்று விட்டு திருச்சி விமான நிலையத்திற்கு திரும்பி சென்றார். அப்போது அரசு பள்ளியில் ஹிந்தி பயிற்றுவிக்க வேண்டும்' என்ற வாசக அட்டையை ஏந்தியவாறு, இரண்டாம் வகுப்பு மாணவி துவாரகா மதிவதனி என்ற சிறுமி, கூட்டத்தில் தந்தையுடன் நின்றிருந்தார். இந்த போட்டோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.