ஶ்ரீரங்கத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு வீடியோ

71பார்த்தது
வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்டம் தோறும் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மணிகண்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் சோமரசம்பேட்டை பகுதி, அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம் சார்பில் வியாழன்மேடு பகுதி, மணிகண்டம் தெற்கு ஒன்றியம் சார்பில் அம்மாபேட்டை பகுதி, மணப்பாறை வடக்கு ஒன்றியம் சார்பில் ஆண்டவர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், கோடைகால நீர் மோர் பந்தல்களை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி திறந்து வைத்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில், தர்பூசணி, வெள்ளரி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளும், இளநீர், ஜூஸ் வகைகள், நீர்மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைப்புச் செயலாளர் மனோகரன், சிறுபான்மையினர் மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி