முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் அந்தநல்லூர் ராஜ்மோகன் அவர்களின் ஏற்பாட்டில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட் ஜீயபுரம் பகுதியில் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தினை மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கடிகை. ராஜகோபால், சிறுகமணி பேரூர் கழக செயலாளர் செந்தில் குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ஆதி சிவன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்