அமைச்சர் காரை சோதனை செய்த அதிகாரிகள்

69பார்த்தது
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வேட்பாளர்கள் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க 50 ஆயிரம் மேல் ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மதிமுக வேட்பாளர் துரை வைகோ பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருவெறும்பூர் பகுதியில் இருந்து தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோடு விமான நிலையம் அருகே மொராய்ஸ் சிட்டி அருகே அமைந்துள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாகனத்தை வழி மறைத்து சோதனை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி