காவிரி மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

82பார்த்தது
காவிரி மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
காவிரி மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காவிரி ஆற்று மணல் கடத்தி வந்த இரு மாட்டு வண்டிகளை காட்டுப்புத்தூர் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுப்புத்தூர் உதவி காவல் ஆய்வாளர் கருப்பண்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது எம் புத்தூர் மற்றும் சின்ன பள்ளிபாளையம் பகுதியில் இருந்து காவிரி ஆற்று மணலை மாட்டு வண்டியில் ஏற்றி வந்தவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார், அப்போது மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு மாட்டுவண்டி ஓட்டுவந்த நபர்கள் தப்பி சென்றனர். இதனையடுத்து மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சின்னப்பள்ளிபாளையம் சேர்ந்த நாகராஜன் மகன் தரகன் மற்றும் எம் புத்தூர் சேர்ந்த பிச்சை மகன் மதிவாணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீது காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி