சித்திரை தேர் திருவிழா

77பார்த்தது
முசிறியில் சித்திரை திருவிழா முன்னிட்டு மேலத்தெரு ஸ்ரீமகா மாரியம்மன் தேர் வீதி உலா

திருச்சி மாவட்டம் முசிறியில் மேலத்தெரு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் முன்னிட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதனை அடுத்து பூச்செரிதல் விழா, பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முசிறி மேலத்தெரு ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் மாரியம்மன் மலர்களால் அலங்கரித்த சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் அமர்ந்து, நகரத்தின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அது சமயம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தேரில் வலம் வந்த அம்மனுக்கு மாவிளக்கு போட்டு, தேங்காய் பழம் உடைத்து , தீபாரதனை காட்டி வழிபட்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.