வேளாண் கல்லூரி மாணவர்களின் கருத்தரங்கம்

79பார்த்தது
வேளாண் கல்லூரி மாணவர்களின் கருத்தரங்கம்
ஏலூர்பட்டியில் விவசாயிகளுக்கு கருத்தரங்கம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஏலூர்ப்பட்டியில் விவசாயிகளுக்கு முசிறி எம். ஐ. டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடத்தினர்.

முசிறி எம். ஐ. டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கிராமப்புறங்களில் தங்கி விவசாயிகளின் அனுபவங்களை தெரிந்துக்கொண்டும், தாங்கள் கற்ற வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்கும் விதமாக கிராமங்களில் களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், அதனடிப்படையில் ஏலூர்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளை சந்தித்து வாழை மரத்தை தாக்கும் நோய்கள் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் முறை பற்றியும் மாணவர்கள் வரைபடம் மூலமாக விவரித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி