கும்மியடித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்

70பார்த்தது
நாடாளுமன்றத்திற்கான பிரச்சாரம் முடிய 8 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர்கள் பலரும் வித்தியாசமான முறையில் பரப்புரை மேற்கொண்டு மக்களின் மனங்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி இன்று காலை முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் இணைந்து திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி ஒன்றிய பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து மாலையில் பொன்னம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது,
19ந்தேதி வாக்காளர்கள் மிகப்பெரிய மாற்றத்தை வாக்குச்சாவடியில் செலுத்துவார்கள். ஜூன் 4 ல் நாட்டின் இரண்டாவது விடுதலையாக அமையும். என்று பேசினார். வேட்பாளர் எண்டபுளி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற போது அங்கு வரவேற்பு அளித்த பெண்கள் தங்களுடன் சேர்ந்து கும்மி அடிக்குமாறு கேட்டு கொண்டதற்கு இணங்க வேட்பாளர் ஜோதிமணி
ஒலிபெருக்கியில் ஒலித்த கும்மி பாடலுக்கு பெண்களுடன் சேர்ந்து கும்மியடித்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி