திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையால் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனையை சுற்றி தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அப்பகுதியை சுத்தப்படுத்திட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.