மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கும்பாபிஷேக விழா

2240பார்த்தது
திருச்சி, மணப்பாறை திருச்சி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு
ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து கோவில் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியானது முடிவடைந்து தற்போது கும்பாபிஷேக விழா வருகிற ஏப்ரல் 4ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக ஏப்ரல் 3ம் தேதி கால யாக பூஜையானது இரவு 9 முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு வேப்பிலை மாரியம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி