பெரமங்கலத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு

4711பார்த்தது
புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு கோலமாவு விற்பனை செய்து வரும் தொழில் நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த நேற்று இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே சந்துரு உயிரிழந்து விட்டார் என கூறப்படுகிறது. இது குறித்து உயிரிழந்த சந்துருவின் தந்தை சக்திவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த புலிவலம் போலீசார் சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.